தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

புதிய உணர்முறையிலான சித்தாந்தன் கவிதைகள்

Tuesday, September 23, 2008

கருணாகரன்
( காலத்தின் புன்னகை முன்னுரையில்)

மொழியின் ஆகக்கூடிய சாத்தியப்பாடுகளைக் கொண்டியங்கும் கவிதை,மொழியினூடாக உணர்தலையும் உணர்தலை மொழியினுர்டாகவும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. கவிதை உணணர்வாகவும் அனுபவமாகவும் உணர்வினதும் அனுபவத்தினதும் கூட்டுத்திரட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கே சித்ததந்தன் கவிதைகளிலும் இதுவே நிகழ்கின்றது. சித்தாந்தன் கவிதைகள் புதிய உணர்முறையிலானவை.

சித்தாந்தன் புதிய கவிஞர்.புதிய உணர்முறையுடையவர். மாறுதலான கவிதை குறித்துச் சிந்திப்பவர். அiதியும் அந்த அமைதிக்குள் உள்ளியக்கமும் கொண்டவா. மொழியை சித்தாந்தன் பயன்படுத்தும் முறையினூடாக இவரின் கவிதைகள் புதிய வெளிப்பாட்டையும் புதியதான உணர்முறையினையும் வெளிக்காட்டுகின்றன. உணர்வின் சாரத்தோடு இணையும் மொழியினை இவர் அதிக சாத்தியப்பாட்டுடன் கைளாளுகின்றார். இந்த தொகுதியின் முதல் கவிதையான அலைகளின் மொழி கடலை இவர் உணரும் விதத்தையும் அலைகள் இவரூடு உணர்வாகும் தன்மையையும்தன் மொழியினூடு படிக்கும் மனதில் உணர்வாக்கும் முறையிலும்இதனை நாம் தெரியமுடிகின்றது. இவ்வாறுதான் இவரது அநேக கவிதைகள் இயங்குகின்றன.

சித்தாந்தன் கவிதைகளில் உள்ள சொற்களின் அமைவுகள் புதிய படிமங்களை மனதில் நிகழ்த்துகின்றன.புhதிய காட்சிகை விரிக்கின்றகன. புதிய உணர்வினைக் கிளர்த்துகின்றன. இத்தகைய புததிய கவிதை முறைமை தொண்ணூறுகளின் பின்னரான ஈழத்துக் கவிதைகளில் அதிகமாகத் தொனிக்கத் தொடங்கியிருக்கின்றது.
ஈழத்துக் கவிதைகளில் அநேகமானவை நிகழ்வுச் சித்திரிகப்பாகவோ காட்சி விரிப்பாகவோ அனுபவ இயம்புதலாகவோ கதை கூறுதல் போலவோதான் இருந்து வந்துள்ளன. ஒரு மரபாகவும் அந்த மரபின் தொடர்ச்சியாகவும் இன்றும் இவ்வாறு எழுதப்படும் கவிதைகள்தான் அதிகமாகவுள்ளது. நமது கவிதைப்பரிச்சயமும் அறிமுகமும் கூட இவ்வாறுதான் உள்ளது. எமது போராட்டமும் அது சந்தித்த வாழ்வும் கூட இத்ததகைய ஒரு கவதைப் பண்பையும் போக்கையும் உருவாக்கியுள்ளது எனபதையும் நாம் அவதானிக்க வேண்டும். வடிவங்களும் மாற்றங்களும் புதிய பண்புகளும் போக்குகளும் காலத்தோடு இணைந்தே உருவாகின்றன. எமது கவிதையில் இருந்த இத்தகைய பண்புகளும் இத்தகைய அடிப்படையிலானதே. இன்று இந்த தசாப்தத்தில் மாற்றமுற முயலும் போக்கு இவ்வாறானதே.

தொண்ணூறுகளில் பரிணமித்துள்ள புதிய கவிதை முறை, கவமனம் தான் உணர்வதை படிக்கும் மனதும்உணர்வதான கவிதைகளாகத் தருகின்றது.ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒன்றை கவிமனம் உணர்வது போல படிக்கும் மனதும் சுயமாக உணர்வதை இக்கவிதை சொல்கின்றது. வாசகனை இருத்தி வைத்துப் போதிக்கும் மேல் நிலை – அதிகார நிலையை இக்கவிதை தகர்க்கின்றது. ஆனால், தெளிவும் ஒழுங்குமற்று சொற்குவியலாக எழுதித் தள்ளப்படும் சில கவிதைகள்படிக்கும் மனதில் தங்கிவிடாமல் அழிந்துவிடும் அபாயமும் இதில் உண்டு. இங்கே செய்யப்படும் கவிதைகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. கவிதைகளலி; அதை ஒரு தொழிலல்நுட்பமாகப் பயின்று எழுதப்படும் கவிதைகளும் உண்டு. இப்படி எழுதப்படும் கவிதைகளில் கவிதையின் இயல்புத்தன்மை அழிந்து, சூழலிலின் அடையாளம் தவறி, பண்பாட்டின் முகம் மாறி, காலத்தின் தடங்கள்மங்கி, இயந்திரத்தன்மை கூடி விடுகின்றது. இது படைப்பின் இயல்பையும் அதன் அடிப்படையான உயிர்ப்பு நிலையையும் இழந்து விடுகின்றது. ஆனால் சித்தாந்தன் தன் கவிதைகளில் இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு செயற்படுவதை நாம் உணரமுடிகின்றது.

தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் எழுத்தில் இயங்கத் தொடங்கிய சித்தாந்தன் கடந்த மூன்று ஆண்டுகளுள் எழுதிய கவிதைகள் இவை. எழுதத்தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே தொகுதியாக வெளிவரும் சாத்தியம்ஒரு படைப்பாளிக்கு நமது சூழலில் கிடைப்பது அரிது. அது சித்தாந்தனுக்கு வாய்த்திருக்கின்றது. இது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்த மூன்று வருடங்களில் ஈழக்கவிதை மரபின் தொடர்ச்சியாகவும் அதில் இருந்து முன்னே பாய்வதாகவும் தன் கவிதைகளை எழுதியுள்ளார் சித்தாந்தன். பிரதிபலிப்புக்களும் சுயஆக்கமுமாக ஒரு தொடக்க நிலைப்படைப்பாளியின் இயல்போடு வெளிக்கிளம்பியுள்ள சித்ததந்தானின் கவிதைச் செயற்பாடுபுதிதான அடையாளத்தைப் பெறத்தொடங்கியுள்ளது. எழுதப்பட்ட காலவரிசை ஒழுங்குபடுத்தப்படாவிட்டாலும் கவிதைகள் அதைக்காடடுகின்றன. அதேவேளை சித்தாந்தன் புதிய விடயங்களை நோக்கிச் செல்வவேண்டிய அவசியத்தையும் இக்கவிதைகள் உணர்த்துகின்றன.

கவிதை அறம் சார்ந்ததும் அறிவார்ந்ததுமான ஒரு செயற்பாடு என்பதில் சித்தாந்தன் தெளிவாக இருக்கின்றார். வாழ்வை நோக்குவதிலும் அதனை இயம்புவதிலும் கவிதை முக்கியமாகத் தொழிற்படுகின்றது. தீவிர அக்கறையின் பாற்பட்ட அவதானிப்பும் சிந்திப்பும் கவிதையிலும் அமைந்திருக்கின்றது. கவிதை வாசிப்பிலும்இந்தப்பிரக்ஞையும் அவதானிப்பும் அவசியமாகின்றது. அக்கறையற்ற வாசிப்பில் கவிதை வாசகனை விட்டு வெகுதொலைவில் விலகி நிற்கின்றது. அக்கறையின் தளத்தில் இயக்கம் கொள்ளும் கவிதை காலம், சூழல் என இரண்டும் இணையும் புள்ளியில் மனித மனத்தில் உருவாக்குகின்றது. சித்தாந்தன் இந்தப் புரிதலுடன் தன் கவிதைச் செயற்பாட்டில் இயங்குவதை புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழ்க் கவிதைப் பரப்பு பெரியது. பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்வது. ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் கவிதைகளுடனான அறிடுமுகமோ பரிச்சயமோ மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வராலற்றினையும் வாழ்வினையும்நமது கவிதைகளே அநேகமான தருணங்களில் பதிவு செய்து வந்திருக்கின்றன. இவை பற்றிய நோக்கினையும் பேசி வந்துள்ளன. எமது கவிதைக்கு பெரும் சரித்திரப்பின்னணி இருக்கின்றது. இன்றைய கவிஞனுக்கும் படைப்பாளிக்கும் இந்த அறிதல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

எந்தப்படைப்பும் ஒரு சரித்திரப்பின்னணியுடனேயே படைப்பாக்கம் பெறுகின்றது.எழுதப்படும் போதும் எழுதப்படுவதை ஏற்கப்படும் போதும் இந்தச் சரித்திரப்பின்னணி முக்கியமாக இருக்கின்றது. எமது சரித்திரப் பின்னணி இன்று அரசியற் கவிதகளை (கவிதையில் அரசியல் கவிதை, பிறகவிதை என்ற அடையாளங்களோ இல்லை. நேரிடையாகவும் வெளிப்படையாகவும் அரசியல் பிரச்சினைகளையும் அரசியல் கருத்துருவங்களைம் சார்ந்தும் பிரதிபலித்தும் இயங்கும் கவிதைகளை இங்கே ஒரு புரிதலுக்காக அரசியல் கவிதைகள் எனக்குறிப்பிடுகின்றேன்) எழுதும்படி கவிஞனைத் தூண்டுகின்றது. அரசியல் கவிதைகளுக்கான எதிர்பார்க்கையும் வாசகனிடத்தே அதிகமாகவுள்ளது.

சித்தாந்தனின் காலத்தின் புன்னகையிலும் இந்தச் சரித்திரப் பின்னணியும்அதனாலான அரசியல் கவிதைகளும் இடம்பெறுகின்றன. போரையும் போர் வாழ்வையும்ஈழப்போராட்ட வாழ்வின் முகத்தையும் இந்தக் கவிதைகளில் பல உணர்தளமாக கொண்டவை.இனவாத அரசியலின் உக்கிரத்தை எதிர்த்து நிற்பவை. இந்த அரசியலின் கபடத்தனத்தை புலப்படுத்தும் ஒளிப்பொறியானவை.

இந்தத் தொகுதியில்அரைவாசிக்கு மேலான கவிதைகள் அரசியல் பிரச்சினையின் உணர்வுகளே. அவர் தன் கவிதையில் கொண்டுள்ள உணர்வை (விசயத்தை)பிற கவிதைகள் எழுதியிருந்தாலும் இவரிடம் அவை வெளிப்பாடடையும் விதம் வேறானவை. புதியவை. கவனிக்கத்தக்கவை. உயிர்ப்புள்ளவை. உதாரணமாக ஆட்களற்ற கிராமத்தை சித்தாந்தன் உணரும் விதத்தை மனிதர்களற்ற கிராமத்தின் கதையில் காணலாம்.

அரசியல் நேரடியாக வாழ்வைப் பாதிக்கும்போதும் அது சிதைச்த வாழ்வைப் பாதிக்கும்போதும்கவி மகதில் பெறும் உணர்தல் கவிதையிலும் அமைந்து விடுகின்றது. சித்தாந்தனின் கவிதைகள் பலவற்றிலும் உள்ளதீவரம் அதிவேகமாகச் சுழலும் மாபெரும் சக்கரமாகி நமது உணர்தாளத்தை அத்தனை வலுவுடன் தாக்குகின்றது. சுiலும் சக்கரத்தின் இயங்கு மையமாக வரின் கவிதை மொழி உணர்வு கொள்கி;றது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு புதிய முறையிலான கவிதை வாசிப்பு இங்கே அவசியமாகின்றது. வாசக அறிவாற்றலையும்உணர்திறனையும் மனதின் இயங்கு முனைகளையும் வேண்டி நிற்கின்றன இவ்வாறான கவிதைகள். இந்தக் கவிதைகளுடன் பயணிக்க முடியாத ஒரு படிப்பாளன் மிகவும் தேங்கிய நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கின்றது.அதேவேளையில் அவன் மொழியினதும் சிந்தனையினதும்உணர்முறையினதும் இயக்கத்தை தவறவிட்டவனுமாகினறான். சித்தாந்தன் மொழியினூடேயும் உணர்முறையிலும் வலுவோடு ஊடுருவிச் செல்கின்றார்.


சித்தர்தனின் அநேக கவிதைகளில் இன்னொரு அம்சமும் உண்டு. எதிர்வெளியில் பாத்திரத்தைச் சிருஷ்டித்து அதனுடன் உறவாடுகின்றார். சில சந்தர்ப்பங்களில் அந்தப் பாத்திரத்துடன் மோதுகிறார்.தருணங்களில் விலகுகின்றார். குற்றம்சாட்டுகின்றார். பிடிவாதமாக நிற்கின்றார். தழுவுகின்றார். சரித்து வீழ்த்துகின்றார். இப்படி பல வண்ணங்களில்தான் சிருஷ்டித்த பாத்திரத்துடன் அவரது உணர்தல் நிகழ்கின்றது. இந்தப் பாத்திரம் தருணங்களில் வேறுவேறு தளங்களுக்குத் தாவி வௌ;வேறு இயல்புடன் நிற்கின்றது.அது சித்தாந்தனின் காலத்திலும் சூழலிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அவரைப் பாதிக்கும் மையமே. இதுவெளைகளில் பல பாத்திரங்களாக புலப்படுவதையும் நாம் உணரலாம். இது சித்தாந்தனுக்கு மட்டும் நேரும் நிலைமையல்ல. நமக்கும் கூட இப்படித்தான் நேர்கின்றது.

ஒரு தொகுதியில் படைப்பாளியின் மனவுலகுநிச்சயமாகப் புலப்பட்டே தீரும். இங்கேயும் சித்தாந்தனின் மனவுலகு நன்கு தெரிகின்றது.அவசியமான இடைவெளி,மௌனப் பிரளயம், எதிலும் நானில்லை, ஆதியிலிருந்து எனது வருகை, ஆகிய கவிதைகள் புலப்படுத்துகின்றன.

நீ இன்னும்
உன் சிறகுகளின் வலிமைக்கு
என்னை வலிந்திழுக்கிறாய்
நீ போய் விடு
தொடமுடியாத தூரமாயே
எம் இடைவெளி இருக்கட்டும்

என்று தன்னை நிலைப்படுத்தும் சித்தாந்தன்நம்மிடம் தன்னை மிக நிதானத்தோடு இருத்திவிடுகின்றார். பல பரிமாணங்களுடைய இக்கவிதைவரிகளினூடே எண்ணங்களாயும் உணர்வாயும் விரியும் இயல்போடிருக்கின்றன. இவ்வாறு பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மனித உறவு, இயற்கை மீதான பிரியம், மனம் தாவும் வெளிகள் எனப் பல கோலங்களைக் காட்டும் கவிதைகள் பல இவரின் கவிதைப்பரப்பை உணர்த்துகின்றன.

சமகால ஈழத்துக்கவிதைகள் ஒரே சுழலிலேயேவாசகனை அழைத்துச் செல்கின்றன.சித்தாந்த் கவிதைகளிலும் இவ்வாறான நிலையிருந்தாலும்அவர் புதிய வெளிகளுக்கும் பயணிக்கின்றார். இந்தப் பயணிபபே இனி இவரின் கவிதையாகட்டும்.

இயக்கச்சி
2000.02.27